16 Jun 2024 5:25 PM GMT
#47567
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்
நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ராசிபுரம் நகரத்தில் சாலைகள் குறுகிய அளவில் இருந்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ராசிபுரம் கடைவீதிகள், கச்சேரி தெரு, பூக்கடை வீதி போன்ற இடங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் போக்குவரத்துக்கு இடையூறாக வணிக நிறுவனங்களின் முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமாரசாமி, ராசிபுரம்.