புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
ஆவூர், விராலிமலை
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மலம்பட்டி, ஆவூர், மாத்தூர் வழியாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என்று அதிகளவில் மலம்பட்டியில் இருந்து திருச்சிக்கு செல்லும் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். இதில் காலை நேரத்தில் அவ்வழியே செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆவூர், மாத்தூர் மற்றும் திருச்சியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பஸ்சில் ஏறி செல்ல முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் காலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.