10 Sep 2023 6:12 PM GMT
#39699
சாலை வசதி தேவை
பெரியசெவலை
தெரிவித்தவர்: வடிவேலன்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை ஊராட்சி 4-வது வார்டில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் புதிதாக தார்சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.