26 May 2024 10:27 AM GMT
#46927
நாய்கள் தொல்லை
பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி முத்துப்பேட்டை ரோடு,அந்தோணியார் கோவில் தெரு, சாமுமுதலி தெரு, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.