7 Jan 2024 12:32 PM GMT
#43478
நாய்கள் பிடிக்கப்படுமா?
நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மாவட்டம் ஆதலையூர் கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். சாலையில் குறுக்கே நாய்கள் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதலையூரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆதலையூர்