29 Jan 2023 1:02 PM GMT
#26209
100 நாள் வேலை தொடருமா?
நாட்டார்மங்கலம்
தெரிவித்தவர்: தொழிலாளர்கள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை சுமார் ஒரு மாத காலமாக அந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாள் வேலை வேண்டி அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்களில், பலருக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே அந்த தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கிடவும், அந்த வேலைக்கு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அட்டை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.