18 Jan 2023 2:46 PM GMT
#25602
நோயாளிகள் அவதி
கொளக்காநத்தம்
தெரிவித்தவர்: தங்கதுரை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடத்தில் அலட்சியத்துடன் காணப்படுகின்றனர். இதனால் நோயாளிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.