11 Dec 2022 3:59 PM GMT
#23421
மழைநீர் வடிகால் வேண்டும்
ஆத்துமேடு
தெரிவித்தவர்: ரோஜாபிரியன்
வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது கூட பஸ் நிறுத்தம் முன்பு தண்ணீர் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். எனவே வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?