1 Oct 2022 3:02 PM GMT
#18497
பாலம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும்
கடையநல்லூர்
தெரிவித்தவர்: காளிமுத்து
கடையநல்லூர்- சேர்ந்தமரம் ரோட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கூடத்தின் முன்புள்ள வாறுகால் பாலம் சேதமடைந்ததால், அதனை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, வாறுகால் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.