17 Sep 2022 11:48 AM GMT
#15447
கிணறு தூர்வாரப்படுமா?
கொம்மடிக்கோட்டை
தெரிவித்தவர்: காசியானந்தம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா கொம்மடிக்கோட்டை மெயின் ரோட்டில் ஊர் பொது கிணறும், அதன் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால், அதனை சிலர் குப்பைத்தொட்டியாக பயன்படுத்தினர். கிணற்றில் கட்டிட கழிவுகளை கொட்டி நிரப்பினர். எனவே, கிணற்றை தூர்வாரி, மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.