12 Sep 2022 12:30 PM GMT
#14420
சேதமடைந்த துணை சுகாதார நிலையம்
செந்தியம்பலம்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலத்தில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். எனவே, சேதமடைந்த துணை சுகாதார நிலையத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.