5 Sep 2022 12:19 PM GMT
#12920
தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
பெரியசாமிபுரம்
தெரிவித்தவர்: மதுசூதனன்
கடையநல்லூர் தாலுகா பாம்புகோவில் பஞ்சாயத்து பகுதியில் இருந்து பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் வெள்ளை மடத்து விநாயகர் கோவில் முன்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் ஓடை உள்ளது. அந்த ஓடையின் தடுப்புச்சுவர் பலம் இழந்து காணப்படுகிறது. மேலும், அதையொட்டி மிகவும் பள்ளமாக காணப்படுவதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே, ஓடையின் தடுப்புச்சுவரை சீரமைத்து, ரோட்டின் ஓரம் தடுப்புச்சுவரும் கட்டிக் கொடுப்பதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.