நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு சரிசெய்யப்படுமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராசிபுரம் அருகே ஆண்டகலூர் கேட் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்குள்ள 4 சாலை சந்திப்பு போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இதனால் ஆண்டகலூர் கேட் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இதன்காரணமாக அங்குள்ள மேம்பாலத்தின் அருகே இருபுறத்திலும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ராசிபுரம் சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் எரிவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மக்கள் நலன் கருதி உயர்கோபுர மின்விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




