14 Dec 2022 12:05 PM GMT
#23527
எரியாத உயர் கோபுர மின் விளக்கு
வைரமடை பஸ் நிறுத்தம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே வைரமடை பஸ் நிறுத்தத்தில் கரூர்-கோவை மெயின்ரோட்டில் இரவு நேரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி நடந்து செல்லும் வகையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் கோபுரம் மின் விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியாமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் விபத்துகள் ஏற்படவும், சட்டவிரோத செயல்கள் நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.