4 Jun 2023 5:20 PM GMT
#33938
வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
கம்பளிநாயக்கன்பட்டி
தெரிவித்தவர்: ரெங்கசாமி
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் வடக்கு புதுச்சத்திரத்தை அடுத்த கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதை பள்ளம், மேடாக காட்சியளிப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பால வேலையை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது மாற்றுப்பாதையை சீரமைக்க வேண்டும்.
-,