22 Jan 2023 4:08 PM GMT
#25877
வாகன ஓட்டிகள் அவதி
வேடசந்தூர்
தெரிவித்தவர்: ரோஜாபிரியன்
திண்டுக்கல் வேடப்பட்டியில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை மர்மநபர்கள் அடிக்கடி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் எப்போதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.