- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆறுரோடு கிராமம் உள்ளது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் உள்ளதால் பிரிவு ரோடு ஏற்படுத்தி ஆறுரோடு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுரோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கரூருக்கு செல்ல ஆறுரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். ஆனால் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் பஸ்கள் ஆறுரோடு பஸ் நிறுத்தம் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக செல்வதில்லை. மாறாக பஸ் நிறுத்தத்திற்கு நெடுந்தோரத்திற்கு முன்பு மேம்பாலத்தில் நின்று செல்கிறது. இதனால் மேம்பாலத்தில் பயணிகள் இறங்கி நெடுந்தூரம் நடந்து ஆறுரோடு பகுதிக்கு செல்கின்றனர். இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு ரோடு வழியாக சென்று ஆறுரோடு பகுதியில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




