- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்காலை ஆக்கிரமிக்கும் செடி-கொடிகள்
கரூர் மாவட்டம் கவுண்டன்புதூர், செட்டித்தோட்டம், செல்வநகர், முத்தனூர் வழியாக புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது. இந்த உபரிநீர் கால்வாய் வழியாக இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்பட்டது. இந்நிலையில் இந்த கால்வாயின் வழியாக உபரி நீரும், மழை காலங்களில் மழை நீரும் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. தற்போது தூர் வரப்பட்ட உபரிநீர் கால்வாய் முழுவதும் ஏராளமான செடி- கொடிகள் ஆள் உயரம் முளைத்து ஆக்கிரமித்து வருகிறது. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.