24 Nov 2024 2:29 PM GMT
#51636
உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுமா?
அண்ணா பூங்கா
தெரிவித்தவர்: திருநாவுக்கரசு
காஞ்சீபுரம் மாவட்டம், வார்டு 14 அண்ணா பூங்காவில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த உடற்பயிற்சி கூடம் ஓராண்டிற்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வமாக இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், போலீஸ் தேர்வுக்காக பயிற்ச்சி எடுத்து வந்த இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.