7 Jan 2024 12:19 PM GMT
#43476
நாய்களால் தொல்லை
காஞ்சீபுரம்
தெரிவித்தவர்: அரசு
காஞ்சீபுரம் மாவட்டம், அப்துல் பருக் சாகிப் சாலையில் இருந்து சிக்னல் ஆபிஸ் செல்லும் வழியில் அதிகமாக தெருநாய்கள் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.