- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியில் அவ்வப்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வரும்போது காவிரி ஆற்று அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து தொடர்ந்து அங்கு குடியிருப்போர் பாதிப்படைந்து வருகின்றனர். குடியிருப்பு வீடுகள் உள்ள காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைத்து வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் குடியிருப்போர் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்களை முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைத்து காவிரி ஆற்றின் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






