- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போலீசார் பற்றாக்குறையால் குற்றசெயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா தலைமையிடமாகும். இங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 30 போலீசார் பணியிடங்கள் உள்ளன. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் பல மாதங்களாக நிரம்பப்படவில்லை. இதனால் போதிய போலீசார் இன்றி பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. கறம்பக்குடி பகுதியில் ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் போலீசார் திணறி வருகின்றனர். போலீசார் பற்றாக்குறையால் குற்ற செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே கறம்பக்குடி போலீஸ் நிலையத்துக்கு போதிய போலீசார் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




