- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில்வே குகைவழிப்பாதை அமைக்க வேண்டும்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையத்தில் இருந்து அந்த வழியாக செல்லும் ரெயில்வே பாதையை கடந்து மதுரை வீரன் நகர், மகாத்மாகாந்திநகர், நாடார் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் மரவபாளையம் ரெயில்வே பாதை வழியாக கடந்து சென்று வருகின்றனர். அதேபோல் மதுரை வீரன் நகர், மகாத்மா காந்தி நகர், நாடார்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மரவாபாளையத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, அங்குள்ள துணை சுகாதார நிலையம், நொய்யலில் உள்ள ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் இந்த ரெயில்வே பாதையை கடந்து வருகின்றனர். மதுரை வீரன் நகர், மகாத்மா காந்தி நகர், நாடார் புரம் பகுதியில் திடீரென எவருக்காவது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் இந்த பாதையின் வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாததால் புங்கோடையில் உள்ள குகை வழி பாதை வழியாக சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் வெகு தூரம் சென்று வர வேண்டியது உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





