- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மது பிரியர்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை
கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள நொய்யல் குறுக்கு சாலையில் பயணிகளின் நலன் கருதி கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை கட்டப்பட்டது. பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை இல்லாததால் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்தாமல் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்று நின்று பஸ்களில் ஏறி, இறங்கி வருகின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது பாட்டில்களையும், தண்ணீர் பாட்டிலையும், உணவு பொட்டலங்களையும் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டு காலியான மது பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு, தண்ணீர் பாட்டில்களையும், உணவு பொட்டலங்களின் கழிவுகளையும் அங்கேயே போட்டுவிட்டு மது போதையில் அங்கேயே படுத்திருந்து செல்கின்றனர். வெயில், மழைக்காலங்களில் கூட இந்த நிழல்கூடத்தில் அமர்ந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





