திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருளில் மூழ்கி கிடக்கும் நான்கு பிரிவு சாலை
வடக்கட்டளை, கூத்தாநல்லூர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை மாரியம்மன் கோவில் எதிரே பாலத்தின் அருகில் ஓகைப்பேரையூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை மையமாக கொண்டு திருவாரூர் சாலை, வடபாதிமங்கலம் சாலை, வடகட்டளை கோம்பூர் சாலை, ஓகைப்பேரையூர் சாலை என நான்கு பிரிவு சாலை உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதிக அளவு காணப்படும் இந்த நான்கு பிரிவு சாலையில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடகட்டளை மாரியம்மன் கோவில் எதிரில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.