- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்துகள் ஏற்படுத்தும் சாலை விரிவாக்க பணி
அரியலூர் முதல் செந்துறை வரையுள்ள குறுகலான சாலையில் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் மற்றும் சிமெண்டு மூட்டைகள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பலர் இறந்துள்ளனர். இதுநாள் வரை தொடர்ந்து விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சில வாரங்களாக அரியலூர் புறவழி சாலையில் உள்ள குரும்பன் சாவடியிலிருந்து செந்துறை வரை சாலை விரிவாக்கம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் சாலை விரிவாக்க பணிகளால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை விபத்துகள் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள சுண்ணாம்புக்கல் மற்றும் மணல்களை அகற்றவில்லை. கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் செந்துறை சாலை முழுவதும் புழுதி மற்றும் புகை மண்டலமாக உள்ளது. இதனால் சாலையில் தேங்கியுள்ள மண்கள் காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்தக்காயங்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.