தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த வெளி மது அருந்தும் கூடம்
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: தியாகராஜன்
தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலையிலிருந்து செல்லும் வழியில் புது ஆற்றுப்பாலம் அருகே சிவா-விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவிலுக்கு அருகே இரவு நேரத்தில் ஏராளமான இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் மது பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இளம் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே காவல் துறையினர் புது ஆற்றுப்பாலம் இரு கரைகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு திறந்த வெளி பாராக செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.