5 April 2023 12:07 PM GMT
#30292
மாடுகள் தொல்லை
திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
சேந்தமங்கலம், பொதுமக்கள்