26 March 2023 1:04 PM GMT
#29686
பயணிகள் நிழற்குடை
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத்
தெரிவித்தவர்: பாரதி
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட சேர்க்காடு பஸ் நிறுத்ததில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெயில் மற்றும் மழை காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைக்க வழி செய்ய வேண்டுகிறோம்.