சேலம் ஐந்து ரோடு சுடுகாடு அருகே சாக்கடை கால்வாயில் நிறைய பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சரியாக செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
-சசிகிருஷ்ணன், தாரமங்கலம்.