வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-02 09:20 GMT

மார்த்தாண்டம் முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், சாலை எது? பள்ளம் எது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிபின், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்