பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-08-02 17:41 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், அய்யம்பாளையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்