சரிசெய்யப்படாத படிக்கட்டுகள்

Update: 2023-07-09 11:44 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் தெரு அருகில் புள்ளம்பாடி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இறங்கி பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்தும் வகையில், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து பொதுமக்கள் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புள்ளம்பாடி வாய்க்காலின் படிகட்டுகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்