மணலூர்பேட்டையில் இருந்து பகண்டை கூட்டுரோடு வழியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு பஸ் வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.