ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் உள்ள தண்ணீர் டேங்க் பஸ் நிறுத்தத்தில் கழிப்பிடம் செயல்பட்டு வந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த முதியவர்கள், பயணிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த கழிப்பிடத்தை திடீரென பூட்டிவிட்டனர். இதனால் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?