குரங்குகள் தொல்லை

Update: 2023-08-09 11:50 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் தேவதானம், மேலஅக்ரகாரம் பகுதியில் சுமார் 1,000-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளதால், அவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்களை எடுத்துச்செல்வதுடன், குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்