குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-02-12 10:59 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பகுதி நன்னிலம்-நாகூர் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்