ஒளிராத மின்விளக்கு

Update: 2023-03-15 10:31 GMT

ஒளிராத மின்விளக்கு

தாராபுரம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அவற்றில் பயணிக்க பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வருகின்றனர். பஸ் நிலையத்தில் மையப்பகுதியில் அமைக்க பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பெரும்பாலும் எரிவது இல்லை. இதனால் பயணிகள் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதி சென்று துயரம் அடைகின்றனர். மேலும் பஸ் நிலையமே இருளில் மூழ்கிக் கிடப்பதால், வழிப்பறி, நகைத்திருடர்களுக்கு ஒரே கொண்டாட்டம்.... ஆனால் அப்பாவி பொதுமக்களுக்கோ திண்டாட்டம்... எனவே தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு உயர் கோபுர மின்விளக்குகளை ஒளிரச் செய்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் பொதுமக்களை பாதுக்காக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

ராசாமணி, தாராபுரம்

9787921207

மேலும் செய்திகள்